ஓடும் வேனில் 264-பவுன் கொள்ளை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் வேனில் 264-பவுன் கொள்ளை போன வழக்கில் மதுரையைச்சேர்ந்த இருவர் கைது. கடந்த 10ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு டெம்போட்ராவலர் வேனில் சென்று கொண்டிருந்தபோது , வேன் மீது கட்டப்பட்டிருந்த இரண்டு சூட்கேஸ்களும் அதிலிருந்த 264 பவுன் நகைகளும் , கொள்ளையடிக்கப்பட்டதாக திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து 6-தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் , மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,வாடிப்பட்டி பகுதிகளை சேர்ந்த வினோத், முட்டிகனேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கொள்ளையர்களிடமிருந்து 64-பவுன் நகைகள் மற்றும் டாடாஏசி, ஸ்கார்ப்பியோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி.சுரேஷ். #உளுந்தூர்பேட்டை #கள்ளக்குறிச்சி #குற்றம் #crime #கொள்ளை #வினோத் #முட்டிகனேசன் #திருடர்கள் #thieves

VIDEOS

RELATED NEWS

Recommended