• முகப்பு
  • குற்றம்
  • குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது - ஒரு ஆடு பறிமுதல்.

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது - ஒரு ஆடு பறிமுதல்.

மாரிமுத்து

UPDATED: May 26, 2023, 6:43:31 PM

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தூர் டி. சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் பாப்புராஜ் (58) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் இருந்து கடந்த 16.05.2023 அன்று மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாப்புராஜ் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த பீட்டர் மணி மகன் ஜஸ்டின் (23) மற்றும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பூபாண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் மூர்த்தி (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி பாப்புராஜின் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வீரபாண்டியன் மற்றும் போலீசார் எதிரிகளான ஜஸ்டின் மற்றும் மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended