மின்சார கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் பலி.
L.குமார்
UPDATED: May 18, 2023, 5:22:40 AM
பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் (35) புருஷோத்தமன்(40) விவசாயி நேற்று மாலை வழக்கம்போல் இவர்களுடைய மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பின அதில் இருவருடைய பசு மாடுகள் வராததால் காலையில் சென்று தேடி பார்த்த போது கோளூர் ஏமாத்தான் குளம் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி இறந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.
மேலும் அப்பகுதியில் மின்கம்பங்கள் பழுதடைந்தும் மின் கம்பிகள் தாழ்வாகவும், அடிக்கடி அருந்து விழும் நிலையில் உள்ளதால் துணை மின் நிலைய அலுவலர்களின் அலட்சிய போக்கால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக பழுதடைந்த கம்பங்களை சீர்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.