கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 1,845 வழக்குகளுக்கு தீர்ப்பு.
இடும்பன்
UPDATED: May 14, 2023, 8:32:03 AM
கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழு உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 5,327 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதில் ரூபாய் 17 கோடியே 50 லட்சத்து. 18 ஆயிரத்து 21 ரூபாய் வசூலிக்கப்பட்டது.