• முகப்பு
  • pondichery
  • காவல்துறைக்கு தெரிந்தே ஆண்டுக்கு 1800 கோடி சூதாட்டம் !

காவல்துறைக்கு தெரிந்தே ஆண்டுக்கு 1800 கோடி சூதாட்டம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலர் அன்பழகன் புதுச்சேரியில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசிடம் உரிமம் பெற்று தொடர்ந்து சூதாட்டம் நடத்தி வருகிறகிறார்கள் இதனை தடுக்க வேண்டும். கடந்த 6 மாத காலமாக ஏனாம் பகுதியில் ராயல் ஏனாம் ரெக்ரேஷன் சொசைட்டி என்ற பெயரில் அரசிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய சூதாட்டத்தை அந்த பகுதியில் இருக்கின்ற அரசியல்வாதிக்கும், அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு சில உயரதிகாரிகளுக்கும், ஏனாம் பிராந்தியத்தில் உள்ள காவல்துறைக்கு தெரிந்தும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடக்கிறது. ஆனால் அங்கு ஏனாமில் சேர்ந்தவர்கள் விளையாட அனுமதியில்லை. மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும், குற்ற பின்னனி உள்ளவர்களும் அங்கு தங்கி அரசு அதிகாரிகளின் துணையோடு ராயல் ரெக்ரேஷன் சொசைட்டி என்ற கிளப் மூலம் நடைபெற்று வருகிறது என்று குற்றஞ்சாட்டினார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்க கூடிய அனைத்து மனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்து அவற்றை தடை செய்ய வேண்டும். புதுச்சேரியில் மசாஜ் சென்டருக்கு அனுமதி கொடுக்க கூடாது. ஸ்பா, மசாஜ் கிளப் மூலமாகத்தான் தவறான செயல்கள் நடக்கிறது ,விபச்சாரமும் நடக்கிறது. இவற்றிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றார். பேட்டி : அன்பழகன், மாநில செயலாளர், அதிமுக. புதுச்சேரி செய்தியாளர் சக்திவேல்.பா.

VIDEOS

RELATED NEWS

Recommended