• முகப்பு
  • கல்வி
  • பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 15,297 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் 93.86 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 15,297 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் 93.86 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 19, 2023, 10:22:05 AM

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,011 மாணவர்களும், 8,287 மாணவியர்களும் என மொத்தம் 16,298 மாணவர் - மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

வெளியான தேர்வு முடிவின்படி7, 292 மாணவர்களும், 8,005 மாணவியர்களும் என மொத்தம் 15,297 மாணவர் - மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் 93.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில், 137 அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் 100 சதவீதமும், அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 07 பள்ளிகள் 100 சதவீதமும், 75 மெட்ரிக் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended