தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நடைபெற்றது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 13, 2023, 10:08:27 AM
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மற்றும் கிராமம் பொதுமக்கள் சுபிட்சம் பெற்று வாழ்வதற்காக 108பசுகளுக்கு
மஞ்சள், குங்குமம், தாம்பூலம் மற்றும் திருமாங்கல்யம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கி கோ பூஜை நடைபெற்றது.
கோ பூஜையில் நடைபெற்றது இதில் வேங்கடத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தங்கள் பசுக்கள் மற்றும் கன்றுகளை அழைத்து வந்து கோ பூஜையில் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் சிவனடியார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
துறையூர் செய்தியாளர் அருண்.