• முகப்பு
  • district
  • தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு மேலும்...

தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு மேலும்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் தாக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் செய்தியாளர் மோகன். இன்றைய செய்திகள் தஞ்சாவூர்,இன்றைய முக்கிய செய்திகள் தஞ்சாவூர்,இன்றைய செய்திகள் தஞ்சாவூர்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,Thanjore news tamil,Thanjavur news,Thanjavur news in tamil today,Thanjavur flash news today in tamil,Ten people, including two boys, were killed when they were struck by electricity during a chariot festival

VIDEOS

RELATED NEWS

Recommended