அரியலூர்- போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.

வேல் முருகன்

UPDATED: May 25, 2024, 7:40:04 PM

அரியலூர் மாவட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் கூலி தொழிலாளியான இவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் சிறுமி யாரிடமும் கூறவில்லை நாளடைவில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

புகாரின் பேரில் போலீசார் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர் இது குறித்த விசாரணையில் போக்சோ குற்றவாளி அருளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு நான்கு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் அரசிற்கு உத்தரவிட்டது.

 

VIDEOS

Recommended