![](assets/tgi-logo2.jpg)
புவனகிரி அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோவில் கைது.
![புவனகிரி அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோவில் கைது.](https://api.thegreatindianews.com/uploads/original/teenager-who-sexually-harassed-a-class-10-student.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
சண்முகம்
UPDATED: May 30, 2024, 6:19:28 AM
கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி முள்ளி பள்ளம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான விஜயகுமார்(35) என்பவர் உள்ளே நுழைந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அப்போது சிறுமி கூச்சலிடவே வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபர் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைப் பார்க்கும் பலரும் விடியா ஆட்சியில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துவதாக பலரும் தெரிவித்தனர்.