• முகப்பு
  • சென்னை
  • சென்னையில் பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

சென்னையில் பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

சுந்தர்

UPDATED: May 21, 2024, 12:54:22 PM

சென்னை , வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி காசியம்மாள் (50). இவர் கடந்த 19ஆம் தேதி இவரது வீட்டில் அருகில் இருந்த காலி மனையைய் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது குப்பைகளுக்கு இடையே மறைந்திருந்த கொடிய விஷம் உள்ள பாம்பு இவரை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் அலறியபடி மயங்கி விழுந்தார்.

இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்புடுத்தி உள்ளது.

மேலும் இந்தப் பகுதிகளில் இருக்கும் காலி மனைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என சென்னை பெரு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அதே போல் மாநகராட்சி சார்பில் குப்பைகளை சுத்தம் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

VIDEOS

Recommended