• முகப்பு
  • சென்னை
  • கணவனின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த பெண் குத்தி கொன்ற கணவன்.

கணவனின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த பெண் குத்தி கொன்ற கணவன்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 30, 2024, 6:47:37 AM

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவை சேர்ந்த பிரேம்குமார் வயது 28 இவருக்கும் ராஜலட்சுமி என்ற பெண்ணுக்கும் காதல் வயப்பட்டு ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மித்ரா ஸ்ரீ வயது 5 என்ற ஒரு பெண் குழந்தையும் விக்னேஷ்வர் வயது 2 என்ற ஆண் குழந்தையும் உள்ளது

பிரேம்குமார் எண்ணூர் அசோக் லேலாண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

ராஜலட்சுமி கணவர் பிரேம்குமாரின் தம்பியான ரமேஷ் என்பவர் உடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளதை பலமுறை கண்டித்துள்ளார்

இந்நிலையில் நேற்று இரவு மவுண்ட் ரோடு ஸ்பெண்சர் பகுதியில் இருந்து பணி முடிந்து வீட்டுக்கு எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 18வது தெருவில் நடந்து வந்த ராஜேஸ்வரியை பின் தொடர்ந்து வந்த பிரேம்குமார் குடிபோதையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து கழுத்து, தலை, விளா எழும்பு, ஆகிய பகுதிகளில் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடினார் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஸ்வரியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் தப்பி ஓடிய பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கணவனே கொன்ற சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended