• முகப்பு
  • சென்னை
  • ஒரு நைட்டு கனமழைக்கே சாலையில இவ்வளவு தண்ணி தேங்கி நிக்குது.

ஒரு நைட்டு கனமழைக்கே சாலையில இவ்வளவு தண்ணி தேங்கி நிக்குது.

சுந்தர்

UPDATED: Jun 18, 2024, 6:43:42 PM

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வளசரவாக்கம் மண்டலம் 11க்கு உட்பட்ட 145 ஆவது வார்டு பகுதியில் நேற்று நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக வீதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குலம் போல் தேங்கி நிற்கிறது.

தேங்கிய தண்ணீரில் இறங்கி நூதன முறையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் தனது செல்போனில் செல்பி எடுத்த படி வீடியோ எடுத்து கால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறியதாவது :

அதிகாரி அவர்களே 145 வது வார்டு பகுதியில் நிலைமை இதுதான்.

இந்தப் பகுதியில் 60 கால்வாய் அமைக்க வேண்டும்' மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம்.

ஒரு இரவு கனமழைக்கே சாலை முழுவதிலும் எவ்வளவு மழைநீர் தேங்கி நிற்கிறது.

அதனை ஆதாரத்தோடு இப்போது காட்டுகிறோம் என வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் முறையாக கால்வாய் மழை நீர்வாடி கால்வாய் அமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளர்..

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

VIDEOS

Recommended