• முகப்பு
  • சென்னை
  • பள்ளிக்கரணையில், பேன்சி கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல்

பள்ளிக்கரணையில், பேன்சி கடைக்காரர் மீது கொலைவெறி தாக்குதல்

நெல்சன் கென்னடி

UPDATED: May 25, 2024, 6:50:52 PM

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி, 45. இவர் மனைவி சங்கரி. தம்பதியினர் அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுக்கு முன், தன் மனைவி சங்கரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்த கள்ளக் காதல் குறித்து, உமாபதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன் கணவருடனேயே வாழப்போகிறேன் என, சங்கரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சங்கரியின் கள்ளக்காதலன் சத்தியமூர்த்தி தன் நண்பர்கள் நாகராஜ், சீனிவாசன் மற்றும் குட்டி ஆகியோருடன் மது போதையில் உமாபதி வீட்டிற்கு வந்து கதவைத் தட்ட, உமாபதி, சங்கரி இருவரும் வெளியே வந்துள்ளனர்.

அப்போது, சத்தியமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் உமாபதியின் பின்பக்க தலையில் அருவாளால் வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். உமாபதியை மீட்ட அக்கம்பக்கத்தினர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உமாபதி தலையில் ஆறு தையல் போடப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய உமாபதி, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ், சீனிவாசன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

தவிர, தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான சத்தியமூர்த்தி மற்றும் அவருடைய நண்பரை தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended