• முகப்பு
  • ஆன்மீகம்
  • பல்லக்கில் வைர, வைடூரியங்களை அணிந்து வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து திருவீதி உலா

பல்லக்கில் வைர, வைடூரியங்களை அணிந்து வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து திருவீதி உலா

லட்சுமி காந்த்

UPDATED: May 28, 2024, 10:39:37 AM

Kancheepuram Deva Raja Perumal Temple

காஞ்சிபுரம் உலகப்பிரசித்தி பெற்ற தேவராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாதப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த 20 ந் தேதி கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

காலை மாலை என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார்.

9 ஆம் நாளான இன்று காலை ஆள்மேல் பல்லக்கில் வைர, வைடூரியங்களை அணிந்து கொண்டு வரதர் எழுந்தருளினார், வழியெங்கும் பக்தர்கள் நின்று கொண்டு ஆள்மேல் பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை தரிசித்தனர். 

தேவராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதர், மூங்கில் மண்டபம் , பேருந்து நிலையம் வழியாக நான்கு ராஜவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

VIDEOS

Recommended