காஞ்சிபுரம் ஸ்ரீ புண்ணியகோடீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 19, 2024, 7:44:38 AM

காஞ்சிபுரம் மாநகரில் சின்னக் காஞ்சிபுரத்தில் பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க தர்மதவர்த்தினி சமேத புண்ணியகோடிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் தலைமை சிவாச்சாரியார் கே .ஆர். காமேஸ்வர குருக்கள் தலைமையில் தொடங்கின. 

இதனை அடுத்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையிலிருந்து புனித நீர்க் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. 

மாலை 6 மணிக்கு ஆலயத்தில் தர்மவர்த்தினி அம்பாளுக்கும் புண்ணிய கோடீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

 

VIDEOS

Recommended