• முகப்பு
  • கல்வி
  • தூய குடிநீர், மற்றும் மாணவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்துவதற்கான மேடை திறந்து வைப்பு

தூய குடிநீர், மற்றும் மாணவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்துவதற்கான மேடை திறந்து வைப்பு

எம்.கே. எம். நியார் 

UPDATED: Jul 5, 2024, 2:35:48 PM

 பதுளை அல் அதான் ம. வி.மாணவர்களுக்கு இதுவரை பெரிய குறைபாடாகவும் தேவையாகவுமிருந்த தூய குடிநீர், மற்றும் மாணவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்துவதற்கான மேடை என்பன இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன.

தூய குடிநீருக்கான அனைத்து செலவீனங்களையும் நெதர்லாந்து நாட்டின் அனுசரணையுடன் ஸ்டின்ஸ்டிக் அரச சார்பற்ற நிறுவனமும், மெதகம யூத் அமைப்பும் மேற்கொண்டிருந்தன.

 மேடை அமைக்க தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை பிரபல தொழிலதிபரும், தனவந்தருமான அல்ஹாஜ் நளர்  வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வுகளில் மாகாண கல்வித் திணைக்கள உதவி கல்வி பணிப்பாளர் வெங்கடேசன், கோட்ட கல்வி பணிப்பாளர் சம்பத் பிரசன்ன பள்ளித்தலைவர்,தனவந்தர்கள்,மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

 

VIDEOS

Recommended