மொபைல் கடையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

சுரேஷ்பாபு

UPDATED: Aug 21, 2024, 7:38:26 AM

திருவள்ளூர் மாவட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் நகர் பகுதியில் இரண்டு வருடமாக மொபைல் கடை இயங்கி வருகிறது இந்நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் ஜே என் ரோடு சாலையில் உள்ள செல்போன் கடையில் கைவரிசை காட்டிய திருடர்கள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடை மூடிய நிலையில் மறுநாள் காலை பூ வியாபாரம் செய்பவர்கள் கடை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்

செல்போன்கள் திருட்டு

உடனடியாக வந்து கடையை பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 2500 மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்வீஸ் வந்த செல்போன்கள் அனைத்தும் திருடப்பட்டு உள்ளது 

இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் புருஷோத்தமன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இது குறித்து உடனடியாக காணாமல் போன செல்போன்களை மீட்டு தரும்படியும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

காணாமல் போன செல்போன்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன டவுன் காவலர்கள்.

 

VIDEOS

Recommended