• முகப்பு
  • குற்றம்
  • இரண்டு அரசு பேருந்துகளை ஜப்தி செய்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்.

இரண்டு அரசு பேருந்துகளை ஜப்தி செய்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 10, 2024, 1:20:20 PM

மதுரை மாவட்டம்

கள்ளிக்குடி தாலுகா சுந்தரகுண்டு கிராமத்தைச் சேர்ந்த பூவரே சன் கடந்த 9 -8 - 2018 அன்று கல்குறிச்சியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் புறவழிச்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்த வழக்கு விசாரணை விருது மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 வருடத்திற்கும் மேல் நடைபெற்று வந்த நிலையில்,

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம்

கடந்த 23- 8 -2023 அன்று விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ரு 27 லட்சத்தி 35 ஆயிரத்து 600 நஷ்ட ஈடு வழங்கவும், வழக்கு நடந்த தேதியில் இருந்து 7.5% வட்டியுடன் கணக்கிட்டு 39 லட்சத்தி 20 ஆயிரத்து 34 ரூபாய் மொத்தமாக வழங்க நீதிபதி டி வி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டார் 

இந்த உத்தரவை பின்பற்றி உரிய இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத் திற்கு சொந்தமான இரண்டு அரசு பேருந்துகளை இன்று ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் ஒப்படைத்தனர்.

 

VIDEOS

Recommended