• முகப்பு
  • அரசியல்
  • வட மாவட்டத்தை பொறுத்தவரை அதிகம் மது அருந்துவது படையாட்சி மற்றும் பறையர் சமூகத்தினர்.

வட மாவட்டத்தை பொறுத்தவரை அதிகம் மது அருந்துவது படையாட்சி மற்றும் பறையர் சமூகத்தினர்.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 12, 2024, 6:00:48 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சி தொடக்கத்தில் மலையடிப்பட்டியில் உள்ள கட்சி கொடியை சீமான் ஏற்றி வைத்தார்.

சீமான்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது :

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களாலும், மதுவை ஒழிக்க வேண்டும் என கூறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களாலும், சாதி வாரி கணக்கு எடுப்பு நடத்தும் கட்சிகளுடனும், மதுவை ஒழிக்கும் கட்சிகளுடனும் மட்டும்தான் கூட்டணி என இருவரும் சொல்லவில்லை.

வட மாவட்டத்தை பொறுத்தவரை அதிகம் மது அருந்துவது படையாட்சி மற்றும் பறையர் சமூகத்தினர். எனவே மதுவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் இருக்கிறது.

Latest Political News In Tamil 

இரண்டும் செய்யாத கட்சிகளுடன் கூட்டணி வைத்து அவர்களுக்கு வலிமை வழங்கிவிட்டு மதுக்கடையை மூட சொன்னால் அது எப்படி நடக்கும். அருந்ததியர், இஸ்லாமியர், வன்னியர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிந்த மாநில கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் ஏன் இல்லாமல் போனது. 

வீட்டுக்கு வீடு வாக்குகளை எண்ணி பணம் வழங்குவது போல் கணக்கெடுப்பு நடத்துங்கள். அனைவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும். எடுத்துக் கொடுக்காதீர்கள் எண்ணி கொடுங்கள். அள்ளிக் கொடுக்காதீர்கள் அளந்து கொடுங்கள்.

இமானுவேல் சேகரன் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்த இரண்டரை மணி நேரம் செலவானது. ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து அங்கு பயன் ஏற்படவில்லை. முதல்வரையும் அவரது மகனையும் இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்க மாட்டார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

பாஜக | அதிமுக

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பதை வரவேற்கிறேன். பாஜக வராது ஏனென்றால் அது மதவாத ஆற்றல் என்று திருமாவளவன் தெரிவிக்கிறார். ஆனால் அவர் தற்போது கூட்டணி வைத்திருப்பது மதுவாத ஆற்றல். 

கடந்த 2021 ஆம் ஆண்டு மரக்காணத்தில் 19 பேர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். 2024 ஆம் ஆண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துவதன் அவசியம் என்ன. அந்த நேரமே நடத்தி இருக்கலாம். மது ஒழிப்பு மாநாடு முடிவில் திருமாவளவன் காலம் தாழ்த்தி விட்டார்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு சமூக முன்னேற்ற மேம்பாடு என்று பேசுவது மலக்குழியின் மேல் அமைக்கும் மல்லிகை பந்தல். சாக்கடையில் மேல் அணியக்கூடிய சந்தனமாலைக்கு சமம் என அண்ணல் அம்பேத்கர் தெரிவிக்கிறார். உயர்ந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் கீழே வரமாட்டேன் என்றால் கீழே இருப்பவர்கள் எந்த காலத்திலும் மேல வர இயலாது. 

தற்போது கல்வியே சமமானதாக இல்லை. ராஜபாளையத்தில் உள்ள கல்விக்கும் சென்னையில் உள்ள கல்விக்கும் வேறுபாடு இருக்கிறது. கேந்திரா வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பாடத்திட்டம் உங்களிடம் இல்லை. 

சாதிய வன்மம்

முதல் தர ஆசிரியர் நகர்ப்புறங்களில் பணியமடுத்தப்படுகிறார். மூன்றாவது தர ஆசிரியர் கிராமப்புறங்களில் பணியாபடுத்தப்படுகிறார். ஸ்மார்ட் சிட்டி என்றுதான் சொல்கிறார்களே தவிர ஸ்மார்ட் வில்லேஜ் என சொல்வதில்லை. 

நகர்ப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசுகள் கிராமப்புறங்களை கண்டு கொள்வதில்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் கிராமங்களில் போதுமானதாக இல்லை. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாடத்திட்டம் சமமாக இருக்கிறதே தவிர கல்வி கற்பிப்பதில் கல்வி கற்பதற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வசதியில் சமச்சீர் இல்லை. இதே நிலைதான் சமத்துவ புரத்திலும் தொடர்கிறது. 

மாற்றுத்திறனாளையும் நல்ல உடல்வாகு கொண்டவரையும் ஒரே மைதானத்தில் ஓடி வெற்றி பெற சொல்ல வேண்டுமானால் அது எவ்வாறு நடக்கும். விடுதலை பெற்ற நாட்டில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்ற முடியவில்லை. தாழ்த்தப்பட்ட தலைவரின் கையில் இருந்து மிட்டாய்களை கூட வாங்காமல் மாணவர்கள் கலைந்து செல்கின்றனர். அந்த பிஞ்சு நெஞ்சுக்குள் சாதிய வன்மம் புகுத்தப்பட்டுள்ளது. 

சிவகாசியில் பட்டாசு விபத்தை தடுப்பதற்கான திட்டம் நம்மிடம் இல்லை. இது பெரிய சீர்கேடு. இதனால் தான் ஆண்டுதோறும் பேரிடரில் பல தொழிலாளர்களை பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை பெருக்கி வாழ்விடத்திலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை முன்னெடுப்பதை தவிர வேறு வழி இல்லை.

தக்காளி விலை உயர்ந்ததும் கவலைப்படும் மக்கள் தக்காளியை விளைவிக்க முயல்வதில்லை. வெங்காயத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயங்கள் நிலமும் வளமும் மனித ஆற்றலும் உள்ள இந்தியாவில் வெங்காயத்தை ஏன் விளைவிக்க முடியவில்லை.

இந்தியா உலகத்திலே மாட்டிறச்சி அதிக ஏற்றுமதி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் தன் ஏற்றுமதி செய்கிறது. அதிகமாக அந்நிய செலாவணி ஈட்டும் தொழிலை பாதுகாக்க மாடு வளர்ப்பதை ஏன் செய்வதில்லை.

பால் ஏற்றுமதியில் பிரேசிலை முந்தி இந்தியா வருகிறது. மாடு வளர்ப்பதில் என்ன பிரச்சனை. பால் உற்பத்தி ஏன் செய்யவில்லை. இன்னும் 11 மாதம் கொடுத்தால் மேய்ச்சல் நிலம் உருவாக்கப்படும்.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையின் மூலப்பொருள் குறைந்தாலும் விற்பனை விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் எண்ணை நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் தான். அதற்கு ஜிஎஸ்டியும் கிடையாது. முதலாளிகளுக்கான பொருளாதாரக் கொள்கையை வகுத்து சட்ட வரைவுகளை கொண்டு வரும்போது பாதிப்பு ஏற்படுகிறது. 

முதலாளிகளின் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட பொருளாதார கொள்கையின் விளைவு இது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது.

காய்கறி விலை போக்குவரத்து செலவு காரணமாக இரண்டு மடங்காக உயர்கிறது. இதனால் மக்கள் வாழ முடியாத நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் இதற்கு ஒரே வழி என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended