• முகப்பு
  • குற்றம்
  • படப்பை அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 40 லட்சம் தங்க வெள்ளி நகைகள் கொள்ளை.

படப்பை அருகே கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 40 லட்சம் தங்க வெள்ளி நகைகள் கொள்ளை.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 10, 2024, 7:29:42 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் சங்கர் ஹேமலதா தம்பதிகள வசிக்கின்றனர். சங்கர் ஏர்டெல் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். வளையக்கரணை பகுதியில் ஹேமலதா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.

கடந்த சனிக்கிழமை அன்று உறவினர் வீட்டு திருமணத்துக்காக தம்பதிகள் இருவரும் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி உற்றனர்.

Breaking News In Tamil

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 51 சவரன் தங்க நகைகளும் 500 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களும், ஐந்தாயிரம் ரூபாய் பணமும் கொள்ளை போனது கண்டு மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை உள்ளிட்ட சோதனைகளை செய்து வருகின்றனர். 

Latest Crime News In Tamil

கரசங்கால், படப்பை ,ஆரம்பாக்கம் வைப்பூர், சொரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது வழிப்பறிகளும், திருட்டு சம்பவங்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்து வந்த போதிலும் மணிமங்கலம் காவல்துறையினர் ரோந்து செல்லாமல் கலெக்சன் பெறுவதிலேயே குறியாக உள்ளதால் தான் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது. 

Latest District News in Tamil

அசம்பாவிதங்கள் எது நடந்தாலும் வெளியே தெரியாத அளவுக்கு காவல்துறையினர் மூடி மறைத்து விடுகின்றார்கள், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் இது போன்ற சம்பவங்களை கண்காணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது என பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended