• முகப்பு
  • குற்றம்
  • புவனகிரி அருகே பேருந்து நிலையத்தில் இரவில் நிறுத்தி வைக்கப்படும் பேருந்தில் இருந்து திருடும் மர்ம நபர்கள்.

புவனகிரி அருகே பேருந்து நிலையத்தில் இரவில் நிறுத்தி வைக்கப்படும் பேருந்தில் இருந்து திருடும் மர்ம நபர்கள்.

சண்முகம்

UPDATED: Sep 9, 2024, 3:38:04 AM

கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு காவல் நிலையம் அருகில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

இவ்வாறான நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் பேருந்து நடத்துனர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது பணப்பையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருட்டு

இதேபோல் மற்றொரு சம்பவத்தில் இதே புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனரின் செல்போனையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் காவல் நிலையம் அருகிலேயே புதிய பேருந்து நிலையம் இருந்தும் துணிந்து நடைபெற்றுள்ள திருட்டு சம்பவம் குறித்து பலரும் அதிர்ந்துள்ளனர்.

காவல்துறை ரோந்து

இதனால் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் பேருந்து பயணிகளுக்கும் , பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் இப்பகுதியில் நிலவி வருகிறது என பலரும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். 

உடனடியாக காவல்துறை இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended