இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தற்கொலை

ஆனந்த்

UPDATED: Aug 21, 2024, 7:39:43 PM

சென்னை

மாங்காட்டை சேர்ந்தவர் குணசேகர்(34), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் அறைக்குள் தூங்க சென்றவர் காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்த போது வீட்டில் குணசேகர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

இதையடுத்து அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்த நிலையில் எங்கும் கிடைக்காத நிலையில் அதே பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே உள்ள மரத்தில் குணசேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து பெற்றோரும், உறவினர்களும் சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டிருப்பது குணசேகர் என தெரிய வந்தது.

தற்கொலை

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் 

விசாரணையில் குணசேகருக்கு அவரது உறவினர் மகளை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு நாளைய தினம் சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் மேலும் அவரது வீட்டில் அவர் எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதில் தான் கடன் வாங்கி இருந்ததாகவும் அந்த கடனுக்கு தானே பொறுப்பு எனவும் பெற்றோரை விட்டு செல்ல தனக்கு மனம் இல்லாமல் செல்வதாக எழுதியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Latest Chennai District News 

இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் குணசேகர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் குணசேகர் தற்கொலைக்கான காரணம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த கடிதத்தை எழுதியது அவர் தானா என்பதை கண்டறிய தடயவியல் சோதனைக்கும் அந்த கடிதத்தை போலீசார் அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாளைய தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended