தனக்குத் தானே பிரசவம் குழந்தையின் கால்களை வெட்டிய பெண்.

Admin

UPDATED: May 1, 2024, 6:05:59 AM

சென்னை: தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது இரு கால்களும் வெட்டப்பட்டதால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

இறந்த குழந்தையுடன் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு வினிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்துகொள்ளாமல் காதலருடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். 

7 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி வரவே, தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் கால்களை அவரே வெட்டியுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இவர்களின் மேல் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

வினிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவர் மயக்கம் தெளிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

  • 6

VIDEOS

Recommended