• முகப்பு
  • சென்னை
  • அம்பத்தூரில் காணாமல் போனவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு.

அம்பத்தூரில் காணாமல் போனவர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு.

ஆனந்த்

UPDATED: Aug 29, 2024, 8:16:37 AM

சென்னை

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், போரூர் ஏரியின் மேல் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இரு சக்கர வாகனம் ஒன்று கொண்டிருப்பதாக அந்த தகவலையடுத்து போரூர் போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த பாண்டியன்(37), என்பவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும் அவரை காணவில்லை என அவரது மனைவி அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Breaking News

மேலும் போரூர் மேம்பாலத்தின் மேல் இருந்த வாகனம் பாண்டியன் ஒட்டி வந்த வாகனம் என தெரியவந்ததையடுத்து போரூர் மற்றும் அம்பத்தூர் போலீ சாரும் சேர்ந்து பாண்டியன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 

இன்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போது இறந்து கிடந்தது காணாமல் போன பாண்டியன் என்பது தெரியவந்தது

Latest Crime News

இது குறித்து பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாண்டியனுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் இருந்ததாகவும் 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தை கொண்டு வந்து போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்திவிட்டு அங்கிருந்து ஏரியில் குறித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையை தெரியவந்துள்ளதாகவும் 

Latest News

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா அவர் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended