• முகப்பு
  • சென்னை
  • திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்த இளைஞர்கள்.

திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்த இளைஞர்கள்.

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 15, 2024, 9:57:55 AM

திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலை திருசின்னா குப்பம் சாலையில் யமஹா ஆர் எக்ஸ் 100 இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை தூக்கி வீலிங் செய்வதை மற்றொரு டியோ வாகனத்தில் இரு இளைஞர்கள் படம் பிடித்து ரீல் செய்து கொண்டு வந்தனர்.

இதனை செய்தியாளர் செய்தியாக்கியதை கண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகம் எடுத்து ஓடினர் மேலும் இதுபோல் அபாயகரமான செயல்களில் வடசென்னையில் பெரும்பாலான இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பாவி பொதுமக்களை ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்கள் அதேபோல் வீடு பக்கத்தில் உள்ளவர்கள் ஹெல்மட் அணியாமல் சென்றால் துரத்தி துடைத்து பிடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள் இது மாதிரி சட்டவிரோதமாக ரேஸ் மற்றும் வீலிங் செய்யும் இளைஞர்களை கண்டு கொள்வதில்லை என்று சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

 

VIDEOS

Recommended