• முகப்பு
  • சென்னை
  • ஆன்லைன் விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

ஆன்லைன் விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

நெல்சன் கென்னடி

UPDATED: May 16, 2024, 4:22:52 PM

கொருக்குப்பேட்டை ஜேஜே நகர் பகுதீயை சேர்ந்தவர் தனுஷ் ஆவடியில் உள்ள தனியார் தனியார்(வேல்ஸ்)மருத்துவ கல்லூரியில் பிசியோதரபி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் இவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததாக தெரியவருகிறது

மேலும் இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து விளையாடிய அவர் தனது தந்தையிடம் 24 ஆயீரம் ருபாய் பணம் கேட்டுள்ளார் ஆனால்"அவரது தந்தை 4 ஆயிரம் மட்டுமே வங்கி கணக்கு மூலம் பரிமாற்றம் செய்தார்.

பின்னர் 4 ஆயிரம் பணத்துடன் அறையின் உள்ளே சென்று தாழிட்டு கொண்ட தனூஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் வீட்டில் இருந்த தனுஷின் தங்கை கதவைத் தட்டியும் திறக்கவில்லை கதவை தட்டும் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்களும் வந்து கதவை தட்டி உள்ளனர்

சந்தேகம் அடைந்த அவர்கள் ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மின் விசிறியில் தூக்கிட்டு தனுஷ் தற்கொலை செய்து கொண்டூள்ளார்.

போலீசார் தனுஷின் பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தனுஷின் செல்போனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended