ரேஸ் பைக் மோதி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் பலி.

S.முருகன் & சுந்தர்

UPDATED: Aug 4, 2024, 3:04:24 PM

சென்னை

போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமரன் (53), இவரது மனைவி விஜயலட்சுமி இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் போருர் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போரூர் போக்குவரத்து காவல் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ்

இவர் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே இன்று பிற்பகல் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து அதி வேகமாக ரேஸ் பைக்கை ஓட்டி வந்த நபர் ரோந்து பனியில் இருந்த போலீஸ் காரர் குமரன் மீது வேகமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் மீது வேகமாக பைக்கில் வந்து மோதிய நபர் ரேஸ் பைக் ஓட்டும் பாதுகாப்பு ஆடை அனிந்து இருந்தும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Latest Chennai District News

அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ்காரர் குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended