• முகப்பு
  • சென்னை
  • வாக்களிப்பது நமது உரிமை மனசாட்சியுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்திய பின் பேட்டி

வாக்களிப்பது நமது உரிமை மனசாட்சியுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்திய பின் பேட்டி

சுந்தர்

UPDATED: Apr 19, 2024, 4:52:57 AM

நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் சென்று வாக்களித்தார்

செய்தியாளர் சந்திப்பில் பேசியவர் வாக்கு நமது உரிமை என்றும் வாக்களிப்பது நமது கடமை இன்றும் தெரிவித்தார்

தனது ரசிகர்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் வாக்கு செலுத்தினால்தான் ஏதேனும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்

ஆபிரகாம் லிங்கன் கூறியது போல் புல்லட்டை விட வலிமையானது வாக்கு என்றும் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாய்வு செய்யாமல் தங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு மனசாட்சியுடன் வாக்கு செலுத்துமாறு நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

 

  • 7

VIDEOS

Recommended