• முகப்பு
  • சென்னை
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அமைச்சர் உட்பட யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பகுஜன் சமாஜ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அமைச்சர் உட்பட யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பகுஜன் சமாஜ்

சுந்தர்

UPDATED: Jul 23, 2024, 6:30:50 PM

சென்னை

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்டியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சாந்தகுமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் சதி 

கூட்டத்தின்போது, ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு பின்னால் சதி இருப்பதாகவும், சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாந்தகுமார் :

“நினைவஞ்சலியை தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. எங்கள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைக்கு உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் குமரி முதல் இமயம் வரை போராட்டங்கள் வெடிக்கும். இந்த வழக்கில் அமைச்சர் உட்பட யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிபிஐ விசாரணை

கூலிப்படையை முதலில் ஒழிக்க வேண்டும். பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்ட்டர் செய்ய வேண்டும். தமிழக அரசு இன்றைக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 

வருங்காலத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு யாரும் வாக்களிக்கமாட்டார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended