• முகப்பு
  • இலங்கை
  • புத்தளத்துக்கான பாராளுமன்ற உறுப்பினரை பெற வியூகம் என்கிறார் இஷாம் மரைக்கார்

புத்தளத்துக்கான பாராளுமன்ற உறுப்பினரை பெற வியூகம் என்கிறார் இஷாம் மரைக்கார்

அரபாத் பஹர்தீன்

UPDATED: Oct 12, 2024, 8:25:16 AM

Clean nation இயக்கத்தின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் தலைவர் இஷாம் மரைக்கார் அவர்களின் தலைமையில் 2024.10.11 அன்று ஹுதா பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது.

 தலைவர் இஷாம் மரைக்கார் ஆளும் தரப்பில் நமது குரல் எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.. தேரதலில் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் நிச்சயமாக ஆளும் தரப்பில் ஜனாபதிக்கு பங்காளியாக இருந்து அவரின் அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம், தீய விடயங்களுக்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தனது உரையில் தெரிவித்தார்..

அதே நேரம் தூய தேச இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்கார் மேலும் உரையாற்றுகையில் நாங்கள் கடைசி வரைக்கும் ஊரின் சமுகத்தலைமைகள் ஒன்றினைக்கும் பொதுக்கூட்டனியில் ஒன்றிணைந்து செயற்பட பூரண ஒத்துழைப்பை வழங்கினோம்.. ஆனால் முன்னால் அமைச்சர்களான ACMC கட்சியின் தலைவர் ரிஷாத், SLMC கட்சியின் தலைவர் ரவூப் ஹகிம் ஆகியோர் இந்த ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு வழங்காமையினால் சமுகத்தலைமைகளின் கூட்டமைப்பு என்ற விடயம் முடிவுக்கு வந்தது.

கடைசி வரைக்கும் சமுகத்தலைமைகளின் முயற்சிக்கு எமது தூய தேசம் இயக்கம் ஒத்துழைப்பு வழங்கியது என்பதில் சந்தோசம் அடைகிறோம்..

அதே நேரம் இக்கூட்டத்தில் மேலும் உரையாற்றுகையில் நாங்கள் Nfgg கட்சியுடன் நம்முடைய தூய தேசத்தின் கட்சி உடன்பாட்டின் அடிப்படையில் NFGG கட்சியின் சின்னமான இரட்டை கொடியில் தேர்தல் கேட்க உடன்பட்டோம்..

அதே நேரம் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பின்பும் சரி தூய தேசத்துக்கான நம்முடைய இயக்கம் தன்னிச்சையாக செயற்படும் என்றும் அனைத்து முடிவுகளும் தூய தேச கட்சியே எடுக்கும் என்றும் தெரிவித்தார்...

இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக இத்தேரதலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.. அதற்கான அத்தனை வேலைத்திட்டமும் எங்களிடம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended