• முகப்பு
  • குற்றம்
  • நடிகை கவுதமியின் நிலமோசடி வழக்கு கைதான மேலாளர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை.

நடிகை கவுதமியின் நிலமோசடி வழக்கு கைதான மேலாளர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை.

கார்மேகம்

UPDATED: Oct 16, 2024, 10:09:47 AM

இராமநாதபுரம்

நடிகை கவுதமி சினிமாவில் நடித்து பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரது ரசிகராக அழகப்பன் என்பவர் அறிமுகமாகினார் நடிகை கவுதமியிடம் நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொண்டதால் நடிகை கவுதமி தனது சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அழகப்பனுக்கு வழங்கினார் என்றும்

இதற்கிடையே முதுகுளத்தூர் கண்டிலான் பகுதி துலுக்கன் குறிச்சியில் 150 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் நில புரோக்கர் நெல்லியான் என்பவரிடம் 2016 மார்ச் 16- ம் தேதி பேசி முடித்து விட்டதாகவும் அதற்கான தொகை ரூ. 3 கோடியே 16 லட்சம் வேண்டும் என்றும் அழகப்பன் நடிகை கவுதமியிடம் கேட்டுள்ளார்

நடிகை கவுதமி 

அதன்படி நடிகை கவுதமி ரொக்கமாகவும் காசோலையாகவும் அழகப்பன் அவரது மனைவி நாச்சியாள் ஆகியோரிடம் கொடுத்துள்ளார் 

ஆனால் செபி நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது என பகிரங்கமாக அறிவித்த நிலத்தை கூட்டு சதி செய்து பணத்தை ஏமாற்றி அபகரித்ததாக தெரியவரவே இது குறித்து ராமநாதபுரம் நில மோசடி பிரிவு போலீசில் புகார் செய்தார்

நிலமோசடி வழக்கு

அதன் பேரில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து சினிமா பைனான்சியர் அழகப்பனை கைது செய்தனர் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் மேலாளரான மதுரை கருப்பாயூரணி கங்கைபுரம் 2- வது வீதியை சேர்ந்த ரமேஸ் சங்கரையும் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர் இந்த நிலையில் ரமேஸ் சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2- கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்

Latest Crime News Today In Tamil 

இதனை விசாரித்த நீதிபதி பிரபாகரன் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார் 

இதையடுத்து ரமேஸ் சங்கரிடம் போலீஸ் சார் தீவிர விசாரணை நடத்தினர் இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது

அவர் அளித்த தகவலின்படி மதுரையில் உள்ள அவரது வீட்டில் போலீஸ் சார் அதிரடி சோதனை நடத்தினர், மேலும் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் சோதனை நடத்தவும் போலீஸ் சார் முடிவு செய்துள்ளனர். 

 

VIDEOS

Recommended