நடவடிக்கை எடுக்குமா சௌந்தரவல்லி பாளையம் ஊராட்சி நிர்வாகம்.

கோபி பிரசாந்த்

UPDATED: Oct 16, 2024, 8:52:10 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சங்கராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சௌந்தரவல்லி பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குன்று மேடு பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த ஒரு மினி டேங்க் மட்டுமே இயங்கி வந்த நிலையில் இதுவும் பழுது அடைந்து இரண்டு மாத காலம் ஆகிறது.

Latest Kallakurichi District News In Tamil

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். 

இதை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் ஊராட்சி நிர்வகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended