• முகப்பு
  • ஆன்மீகம்
  • அகில உலக சைவ சமய பாதுகாப்பு பேரவையின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

அகில உலக சைவ சமய பாதுகாப்பு பேரவையின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 22, 2024, 4:44:30 AM

அகில உலக சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைமையகம் தமிழ் நாட்டில் உள்ளது என்று அகில உலக சைவ சமய பேரவையின் பொதுச் செயலாளர்சசி குமார் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில் -

சைவ சமய பேரவையின் குறிக்கோள் கொள்கையானது உலக முழுவதும் சைவ சமயத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான்.

 அதன் முதற்கட்ட தொடக்கமாக இலங்கையில் உள்ள 300க்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களை ஒருங்கிணைத்து சைவ சமய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அண்மையில் சைவ சமய பாதுகாப்பு நெறி தொடரில் சிறப்பாக மாணவர்களுக்கான செயல் அமர்வு இடம்பெற்றது.

 வரும் காலங்களில் இலங்கையில் உள்ள அறநெறி பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சைவ நெறி தொடர்பிலான பயிற்சியை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 இந்த பயிற்சி வகுப்பினை மிகவும் சிறப்பாக தெய்வ தமிழிசை அறிஞர் முனைவர் திருவிடை மருதூர் சிவ. ச. நடராஜதேசிகர் அவர்கள் பண்ணிசை பயிற்சி பாசறை பஞ்சபுராணம் தலைப்பில் நடத்தினார்.

அதற்கான நன்றி அறிதலை தாங்கள் தெரிவிப்பதாக பொதுச் செயலாளர் சசி குமார் கூறினார்.

VIDEOS

Recommended