• முகப்பு
  • ஆன்மீகம்
  • மனமும்,உடலும் ஆராக்கியமடைவதுடன்,தீய சக்திகளின் கெடுதிகளில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது - சசி குமார் தெரிவிப்பு

மனமும்,உடலும் ஆராக்கியமடைவதுடன்,தீய சக்திகளின் கெடுதிகளில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கின்றது - சசி குமார் தெரிவிப்பு

Irshad Rahumathulla

UPDATED: Jun 23, 2024, 8:12:19 AM

கேரளாவில் அமைந்துள்ள கோகுலம் ஸ்ரீ பௌர்னமி தேவூர் தேவி ஆலயத்தில் ஒரு இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிழா நிகழ்வு நேற்றைய  தினம் இடம் பெற்றது.

original/img-20240623-wa0023
இந்த விழா நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு சிவசேன கட்சியின் மாநில செயற் தலைவர் சசி குமார் அவர்கள் கலந்து கொண்டதுடன், இதில் கேரளா மாநிலத் தலைவர் புவனச் சந்திரன்,தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சரவனபாரதி,இந்து அமைப்புக்களின் தலைவர்கள்,துறவிகள்,வடாதிபதிகள்,போன்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது தமிழ் நாடு சிவசேனா கட்சியின் மாநில செயற் தலைவர் சசி குமார் அவர்கள் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம்,மனமும்,உடலும் ஆராக்கியமடைவதுடன்,தீய சக்திகளின் கெடுதிகளில் இருந்து பாதுகாப்பும் கிடைப்பதாகவும் இதன் போது குறிப்பிட்டார்.

VIDEOS

Recommended