கும்பகோணம் அருகே ஏனாதிநாத நாயனாரின் குருபூஜை விழா.

ஆர். தீனதயாளன்

UPDATED: Oct 11, 2024, 11:58:38 AM

தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் அருகே ஏனாநல்லூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கற்பகாம்பாள் உடலுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 63 நாயனார்களின் சிறந்த நாயனாரான ஏனாதி நாதநாயனாரின் குருபூஜை விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ கற்பகாம்பாள் உடலுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருக்கு மற்றும் ஏனாதிநாத நாயனாருக்கு தேன் பால் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் செய்து சிவனடியார்கள் தேவாரம் பாடியவாரும், திருக்கயிலை சிவ பூத கன திருக்கூட்ட திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் ஏற்பாடுகளை ஏனா நல்லூர் கிராமவாசிகள், நாட்டாமைகள் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

 

VIDEOS

Recommended