• முகப்பு
  • ஆன்மீகம்
  • கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 14வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும்

கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 14வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும்

ஏ.எஸ்.எம்.ஜாவித்

UPDATED: Sep 10, 2024, 12:27:33 PM

கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 14வது வருடாந்த பொதுக்கூட்டம் 2024 செப்டம்பர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை ஹில் காசல் பிளேசில் அமைந்துள்ள காசல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்கள்  கலந்து கொண்டிருந்தார். அஹதிய்யா பாடசாலைகளின் நிர்வாகிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் பங்கு பற்றிய 14வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

original/img-20240902-wa0045
இதன் போது புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

சட்டத்தரணி எம். அஷ்ரப் ரூமி  கொழும்பு மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவராக எம். றிஸ்வான் அன்ஸார், செயலாளராக அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், உப செயலாளராக இர்ஷாத்  ரஸாக் பட்டேல்ஈ பொருலாளராக  அல்ஹாஜ் அஸாத் ஷாக், உப பொருலாளராக எம். ஏ.அப்துல்லாஹ், கணக்காய்வாளராக ஏ.எச்.எம். கஸ்ஸாலியும் தெரிவு செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் ஊடகப் பொறுப்பாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். நஸார் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended