• முகப்பு
  • ஆன்மீகம்
  • வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

செ.சீனிவாசன்

UPDATED: Aug 19, 2024, 6:26:07 PM

நாகப்பட்டினம் மாவட்டம்  

வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி தேர்பவனியும் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்

வேளாங்கண்ணி

இதனை முன்னிட்டு குறிப்பாக ஆரோக்கிய மாதா பேராலயம், விண்மீன் ஆலயம்,ஆராதனை ஆலயம் தியான கூடம், பழைய மாதா ஆலயம் சிலுவைபாதை உள்ளிட்ட ஆலயம் முழுவதும் சாரம் அமைத்து வண்ணமிகு LED மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

Velankanni

மேலும் கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது மேலும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பேராலய நிர்வாகம் செய்து வருகிறது.

 

VIDEOS

Recommended