சிதம்பரம் தில்லை காளி கோயில் உண்டியல் திறப்பு.

சண்முகம்

UPDATED: Jun 28, 2024, 7:37:25 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லை காளி கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் தில்லை காளி கோயில் புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது

முன்னொரு காலத்தில் நடராஜா பெருமாளுக்கும் காளிக்கும் நடனமாடியதாகவும் நடராஜ பெருமான் வெற்றி பெற்றதால் காளி கோபித்துக் கொண்டு சிதம்பரம் எல்லையில் சென்று அமர்ந்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன

சிதம்பரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் திருமணம் ஆகி வெளியூர் செல்லும் பொழுது தில்லை காளியை வணங்கி விட்டு செல்வார்கள் இது ஒரு ஐதீகமாக நடைபெற்று வருகிறது

அப்படி புகழ் பெற்ற அந்த தில்லை காளி கோவிலில் இன்று உண்டியல் எண்ணப்பட்டது இந்த கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாகும்

உண்டியல் எண்ணிக்கையில் பரமத்தொகை. 12.97.789 மற்றும் 36 கிராம் தங்கம் வெள்ளி 175 கிராம் வெளிநாட்டு பணம் யூரோ 20 .ஒன்று மற்றும் யூரோ 10 .1 மற்றும் ஹீரோ 5 .2 இந்த திறப்பின் பொழுது உதவி ஆணையர் கடலூர்  ஆர் சந்திரன் சிதம்பரம் சாரதா ஆய்வாளர் ஜே சீனிவாசன் திருக்கோவில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்

இந்த பணம் எண்ணிக்கையில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

VIDEOS

Recommended