• முகப்பு
  • ஆன்மீகம்
  • மாங்காடு பிரபல அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை.

மாங்காடு பிரபல அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை.

லட்சுமி காந்த்

UPDATED: May 24, 2024, 1:13:14 PM

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகரில் அமைந்துள்ள பிரபலமான ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பிரதி மாதம் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 25ஆவது மாதம் பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த விளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி மங்கள வாழ்வு தரும் குங்கும அர்ச்சனை செய்து, மங்கள மணியோசை எழுப்பி கற்பூர தீபாராதனை காட்டி காமாட்சி அம்மனின் அருளை பெற்றனர்.

மேலும் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு 25 வகை பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் மாதமாதம் வரும் பௌர்ணமி அன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் இதில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

கலந்து கொள்ளும் பெண்கள் 200 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.மேலும் ஆதார் அட்டை ஜெராக்ஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended