• முகப்பு
  • புதுச்சேரி
  • அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் - அதிமுக.

அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் - அதிமுக.

சக்திவேல்

UPDATED: Aug 27, 2024, 8:39:15 AM

புதுச்சேரி

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூவறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக தலைவர்களை விமர்சிக்கும் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடும்வகையில் அண்ணாமலையின் உருவ படத்தை கிழித்தும், செருப்பால் அடித்தும், உருவப் படத்தை தீ வைத்து எரித்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

பாஜக அண்ணாமலை

இது குறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேசும்போது...

தமிழகத்தில் தலைவர்களை பற்றி அவதூறாக பேசி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் இது பற்றி பாஜக மேல் இடமும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் புதுச்சேரிக்குள் அண்ணாமலை நுழைந்தால் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார்.

 

VIDEOS

Recommended