• முகப்பு
  • புதுச்சேரி
  • புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக.

சக்திவேல்

UPDATED: Sep 18, 2024, 11:32:17 AM

புதுச்சேரி

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு ஆட்டோ டெம்போக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த திருக்கனூரில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் உடனடியாக மின் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் மின்துறை தனியார் மயம் ஆவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 50-க்கு மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

போராட்டம் குறித்து திமுக மாநில துணை அமைப்பாளர் குமார் கூறும் போது...

மின் கட்டணத்தை உயர்த்தி என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு புதுவை மக்களை வஞ்சித்து வருகிறது எனவே உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்வதுடன் மின்துறை தனியார் மயமாவதை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

VIDEOS

Recommended