• முகப்பு
  • போக்சோ
  • திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

JK

UPDATED: Aug 21, 2024, 10:32:40 AM

திருச்சி

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் பெற்றோரை இழந்த 10 வயது சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் திருச்சி உய்யக் கொண்டான் திருமலையைச் சேர்ந்த சின்ன ராஜா என்கிற ராஜா (21) என்ற வாலிபர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Latest Trichy Crime News

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் காவல்துறையினர் ராஜாவை  போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கொடுமை இழைத்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட வாமடம் பகுதி பொதுமக்கள் மற்றும் அச்சிறுமியின் உறவினர்கள், தில்லை சாஸ்திரி ரோட்டில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

Latest Trichy District News

மேலும் சம்பவ இடத்தில் திருச்சி மேற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாமடம் பொதுமக்களுடன் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் பாபு, தில்லை பாலா, விஜய், தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுச் செயலாளர் ஓமுத்துவேல், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் அப்பாஸ், தமிம்அன்சாரி, தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு குட்டி, ஆனந்த் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் மாமடம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு திரண்டு சென்று மனு கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended