காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி கர்ப்பம்.

அஜித் குமார்

UPDATED: Aug 5, 2024, 9:44:50 AM

திருவண்ணாமலை மாவட்டம்

கீழ்பென்னாத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறு மியும், விவசாய கூலி வேலை செய்து வந்த சக்திவேல்(வயது 29) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் சிறுமியை அவரது பெற்றோர் ஏற்காததால் அவர் சக்திவேலுடன் வசித்து வந்தார்.

இன்றைய போக்சோ நியூஸ் அப்டேட்ஸ்

இந்த நிலையில் 6 மாத கர்ப்பிணியான சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது  இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்ற பின்னர் மேல்  சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவமனையில் அச்சிறுமியின் ஆதார் அட்டையினை கேட்டு உள்ளனர்.

அப்போது ஆதார் அட்டையில் உள்ள தேதியை வைத்து பார்த்த போது அச்சிறுமி மைனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போக்சோ

இதனால் அச்சம் அடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.

மேலும் அவரது கணவர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended