• முகப்பு
  • போக்சோ
  • காதலித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல்

காதலித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல்

ரமேஷ்

UPDATED: Aug 26, 2024, 11:50:59 AM

கும்பகோணம்

அருகே திருவிடைமருதூர் தாலுக்கா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தென்னவன்நல்லூர் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் கார்த்திக் வயது 23. சிதம்பரம் தில்லை விடங்கன் குண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி வயது 22 இவர் சென்னையில் பாஸ்ட் ட்ராக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். நந்தினி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திக்கை வற்புறுத்தி வந்த நிலையில் கார்த்தி கால தாமதப்படுத்தி வந்துள்ளார்.

போக்ஸோ

இப்படியே எத்தனை காலம் சுற்றுவது என்று நந்தினி கேட்டதால் இந்த மாதமே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சென்னையில் இருந்து நந்தினியை கும்பகோணம் அழைத்து வந்துள்ளார். 

கும்பகோணம் அருகே உள்ள ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகே தங்கும் விடுதி ஒன்றில் நந்தினியை அழைத்துச் சென்று தங்கியுள்ளார். அங்கு நந்தினி உடன் உடலுறவு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Crime News

பின்னர் நந்தினியை திருவிடைமருதூர் சிவன்கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு புறப்பட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. 

நந்தினிக்கு போன் செய்த கார்த்திக் ஜாதி பெயரை சொல்லி திட்டி திருமணம் பற்றி பேசினால் உன் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக நந்தினி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

Latest Kumbakonam District News

காவல்துறையினர் ஆடுதுறையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து அங்கு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

VIDEOS

Recommended