பாலியல் தொல்லை இரு ஆசிரியர்கள் இடை நீக்கம்

ராஜ்குமார்

UPDATED: Jul 10, 2024, 9:07:25 AM

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிட நல மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

செவ்வாப்பேட்டையில் உள்ளது ஆதிதிராவிட நல மகளிர் மேல்நிலைப்பள்ளி.

இதில் கணித ஆசிரியராக ஜெகதீசன், சமூகவியல் ஆசிரியராக பிரேம் பணியாற்றுகின்றனர்.

Latest District News

இவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு புகார் வந்துள்ளது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் செல்வராணி ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது பாலியல் தொல்லை சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Latest Thiruvallur District News

இதனை அடுத்து ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் ஆனந்தன் உத்தரவுப்படி விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவுபடி குழந்தைகள் நல மேம்பாட்டு அலுவலர் இருவர் பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி ஆசிரியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

VIDEOS

Recommended