• முகப்பு
  • போக்சோ
  • பாலியல் வழக்கில் காசியின் கூட்டாளி தலைமறைவாய் இருந்த குற்றவாளி கைது.

பாலியல் வழக்கில் காசியின் கூட்டாளி தலைமறைவாய் இருந்த குற்றவாளி கைது.

முகேஷ்

UPDATED: Apr 28, 2024, 8:12:41 AM

பிரபல பாலியல் குற்றவாளி காசி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை உலுக்கிய பிரபல பாலியல் வழக்கில் கைதாகி, சாகும் வரை சிறை தண்டனை பெற்ற காசியின் கூட்டாளியான,

நாகர்கோவில் ராமன்புதுரை சேர்ந்த ராஜேஷ் சிங் என்பவன் துபாயில் தலைமறைவாக இருந்து சென்னை வந்தவரை நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

காசியோடு சேர்ந்து இவரும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் கைது, ராஜேஷ் சிங் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்சோ செய்திகள் 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் குறிப்பாக டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள்,  கல்லூரி மாணவிகள் ஆகியோர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி பணத்தை அபகரித்துள்ளான் இந்த காசி.

கடைசியில் இவன் சிக்கியது சென்னையைச் சார்ந்த ஒரு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் சிங் இன்று கைது செய்யப்பட்டதன் மூலம்  வேறு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

  • 17

VIDEOS

Recommended