நாகை அருகே தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகன்.

செ.சீனிவாசன்

UPDATED: Jul 21, 2024, 2:09:10 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி

 அருகே தெற்குப்பொய்கை நல்லூரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 16 வயது மதிக்கத்தக்க மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் இரவு தாய் மாவு அரைக்கவெளியில் சென்றுவிட்டார்.

நள்ளிரவு சுமார் 11 மணியளவில் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே சத்தம்போட்டுள்ளார்.

Latest Nagapattinam District News 

அந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார் இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது உடனே சுதாரித்துக்கொண்ட அந்த சிறுமி கொள்ளைபுரம் வழியாக வெளியில் ஓடிச்சென்று தனது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் 

சத்தம்கேட்டு வெளியில் வந்து பார்த்த உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றிகூறி தன் தாயை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

போக்சோ

உடனே உறவினர்கள் தேடி பார்த்தபோது வீட்டின் கொள்ளைபரத்தில் பாவாடையுடன் உடம்பில் கண், காது ,மார்பு ,நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் தாய் மகள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வேளாங்கண்ணி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

NEWS

தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் 3 தனிப்படை அமைத்து அந்த மர்மநபரை தேடிய நிலையில் நேற்று இரவு கருவேலங்கடை அருகே சுற்றித்திரிந்த காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் தனிப்படை போலீசார் பிடிக்கும் போது தப்பி ஓடி வழுக்கி விழுந்ததில் கால், கை முறிவு ஏற்பட்டது அவனை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

VIDEOS

Recommended