மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தந்தை.

சண்முகம்

UPDATED: Aug 28, 2024, 9:27:10 AM

கடலூர் மாவட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டாம்புலியூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மது போதை ஆசாமி சுரேஷ் வீட்டில் தனியாக இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் தனது 11வயது மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

போக்சோ

இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார் , அதிர்ச்சி அடைந்த சுரேஷின் மனைவி தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தந்தை சுரேஷ்ஷை போக்சோ வில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தமிழகத்தில் மது போதை கலாச்சாரத்தால் பெண்கள் சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத தமிழகமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended