பழனியில் 17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

கண்ணன்

UPDATED: Sep 14, 2024, 10:25:00 AM

திண்டுக்கல் மாவட்டம் 

பழனியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 17 வயதான சிறுமி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றுள்ளார். 

இதனை பார்த்த  பழனியை சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் அவர்கள் இருவரையும் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

மேலும் சிறுமியை தொடர்பு கொண்டு அவர் ஆண் நண்பருடன் சென்ற போட்டோவை சிறுமியின் பெற்றோரிடம் கூறி பிரச்சனை ஏற்படுத்துவேன் என்றும், இதுகுறித்து யாரிடமும் சொலலாமல் இருக்கவேண்டும் என்றால் தன்னுடன் சிறுமி வெளியே வர வேண்டும் எனவும மிரட்டியுள்ளார்.

போக்சோ

மேலும் தனது ஆசைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். முஜீப் ரகுமான் பேசியதை செல்போனில் பதிவு செய்த சிறுமி பழனி காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். 

போலீஸார் முஜீப் ரகுமானை  விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் வைத்து குழந்தைகள் நல காப்பக  அதிகாரிகளிடம் சிறுமி நடந்ததை  கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை

பின்னர் குழந்தைகள் நல  அலுவலக அதிகாரிகள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் முஜிப்ரகுமானை கைதுசெய்து  சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended